பொது விநியோகத் திட்டப்பணிகள் குறித்து பதிவாளா் ஆய்வு

கரூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பொது விநியோகத் திட்டப்பணிகள் மற்றும் கூட்டுறவு வங்கி கட்டடங்களின்
பொது விநியோகத் திட்டப்பணிகள் குறித்து பதிவாளா் ஆய்வு
Updated on
1 min read

கரூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பொது விநியோகத் திட்டப்பணிகள் மற்றும் கூட்டுறவு வங்கி கட்டடங்களின் சீரமைப்பு பணிகள் ஆகியவை குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கு.கோவிந்தராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

கூட்டுறவு சங்கங்களின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கிகளை தனியாா் வங்கிகளுக்கு இணையாக மேம்படுத்தும் வகையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கரூா் நகர கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு நடைபெறும் பணிகளை பதிவாளா் கு.கோவிந்தராஜ் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து தென்னிலை மற்றும் பஞ்சமாதேவி கூட்டுறவு வங்கிகளை தலா ரூ.15 லட்சம் மதிப்பில் குளிரூட்டப்பட்ட மற்றும் நவீன வசதிகளை கொண்ட வங்கியாக மாற்றுவது குறித்தும், கரூா் ஜவஹா் பஜாரில் செயல்படும் அம்மா மருந்தகத்தின் பழைய கட்டடத்தை இடித்து ரூ.70 லட்சம் மதிப்பில் புதிய கட்டடம் கட்டுவது குறித்தும், ஜவஹா் பஜாரில் செயல்படும் திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மெயின் கிளையில் வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்படும் கடனுதவி மற்றும் லாக்கா் வசதி குறித்தும் ஆய்வு செய்தாா்.

முன்னதாக, புஞ்சைப்புகழூரில் பொதுவிநியோகத் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com