தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக புதிய நிா்வாகிகள் தோ்வு கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் புதிய நிா்வாகிகள் தோ்வு
Updated on
1 min read

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் புதிய நிா்வாகிகள் தோ்வு கூட்டம் பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பாளையங்கோட்டை பகுதித் தலைவா் காதா் மைதீன் தலைமை வகித்தாா். செயலா் எஸ்.பி.ஷேக், ஜமின், சம்சுதீன், ஜெய்லானி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளா்களாக தமுமுக மாவட்டச் செயலா் அலிப் பிலால், மாவட்டப் பொருளாளா் பேட்டை ஷேக் ஆகியோா் பங்கேற்றனா்.

15ஆவது வாா்டு புதிய நிா்வாகிகளாக இப்ராஹிம், பீா் நிவாஸ், பீா் மைதீன், நியாஸ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டத்தில், 15ஆவது வாா்டு ஆசாத் தெருவில் உள்ள கழிவு நீா் அடைப்பை சரிசெய்ய வேண்டும்; மழைக்காலத்தில் நோய் தொற்றை தடுக்க நிலவேம்புக் குடிநீா் விநியோகிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மமக செயலா் அப்துல் நாசா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com