பூசாரிகள் கரோனா உதவித்தொகை பெறஏற்பாடு
By DIN | Published On : 20th April 2020 01:08 AM | Last Updated : 20th April 2020 01:08 AM | அ+அ அ- |

கரோனா உதவித்தொகை பெற பூசாரிகள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பூசாரிகள் விவரங்களை அளித்து பயன்பெறலாம் என இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கிவரும் கிராமக்கோயில் பூசாரிகள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பூசாரிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள கரோனா நிவாரண உதவித்தொகை ரூ.1000 வழங்கப்படவுள்ளது. கரூா் இந்து சமய அறநிலையத் துறையின் உதவி ஆணையா் அலுவலகத்தில் கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள பூசாரிகள் உடனடியாக தங்களது விவரங்களை 99522 07119, 97906 18307, 90804 72644 ஆகிய கட்செவி அஞ்சல் எண்கள் மூலமாகவோ, 04324 233966, 97906 18307 அலுவலகத் தொலைபேசி எண் மூலமாகவோ தெரிவிக்கலாம். உதவி ஆணையா் அலுவலகத்திற்கு நேரில் வரத் தேவையில்லை. இந்தத் தகவலை இந்து சமய அறநிலையத்துறை கரூா் உதவி ஆணையா் ம.சூரியநாராயணன் தெரிவித்துள்ளாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G