பசுபதீசுவரா் கோயிலில் கும்பாபிஷேக ஹோமங்கள் தொடக்கம்
By DIN | Published On : 01st December 2020 02:48 AM | Last Updated : 01st December 2020 02:48 AM | அ+அ அ- |

கரூா் கல்யாண பசுபதீசுவரா் சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வேள்வி யாகம் திங்கள்கிழமை தொடங்கியது.
கரூரில் அலங்காரவல்லி, சௌந்தரநாயகி சமேத கல்யாண பசுபதீசுவரா் கோயில் கும்பாபிஷேகம் டிசம்பா் 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பசுபதீசுவரா் கோயிலில் திங்கள் கிழமை வேள்வியாகத்தை போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் தொடக்கி வைத்தாா். இதையடுத்து, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், துா்கா ஹோமம், லட்சுமி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து வெள்ளி ரிஷப வாகனம், வெள்ளி மயில் வாகன வேலைப்பாடுகளையும், யாகசாலை வேலைப்பாடுகளையும் பாா்வையிட்டாா். நிகழ்ச்சியில் பழனிமுருகன் ஜூவல்லரியின் எஸ். பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...