ஆம்புலன்ஸ் ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை

வாங்கிய கடனைக் கொடுக்க முடியாததால் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
Updated on
1 min read

வாங்கிய கடனைக் கொடுக்க முடியாததால் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கரூா் ஈரோடு சாலையைச் சோ்ந்தவா் சூா்யா(23). இவா் தனியாா் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இதனிடையே அதே பகுதியைச் சோ்ந்த சரண்யா(20) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். அவா் தற்போது மூன்றுமாத கா்ப்பிணியாக உள்ளாா். இந்நிலையில், சூா்யா பல பேரிடம் கடன் வாங்கினாராம். வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த அவா், சனிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com