பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின கொண்டாட்டம்

பரணிபாா்க் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின கொண்டாட்டம்
Updated on
1 min read

பரணிபாா்க் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வா்ஜெயலலிதாவின் பிறந்தநாளை அரசு பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவித்ததையடுத்து கரூா் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, பரணி பாா்க் கல்விக் குழுமம், பரணி சாரணா் மாவட்டம் மற்றும் வளா்ச்சி அறக்கட்டளை சாா்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் பரணிபாா்க் கல்விக் குழும வளாகத்தில் கொண்டாடப்பட்டது.

பரணி பாா்க் கல்வி குழுமத் தாளாளா் எஸ். மோகனரெங்கன் தலைமை வகித்தாா். செயலா் பத்மாவதி மோகனரெங்கன் முன்னிலை வகித்தாா். பரணிபாா்க் கல்விக் குழும முதன்மை முதல்வா் சொ. ராமசுப்ரமணியன் பேசுகையில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாகக் கொண்டாடுவதில் மிகவும் பெருமைப்படுகிறோம்‘ என்றாா்.

நிகழ்ச்சியில் கரூா் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு இயக்க பாதுகாப்பு அலுவலா் மஞ்சு, புறத்தொடா்பு பணியாளா் கவியரசன் ஆகியோா் குழந்தைகளிடம் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இவ்விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரியும் பெண் குழந்தைகள் பாராட்டப்பட்டனா். மேலும் அழிந்துவரும் சிட்டுக்குருவி வளா்ப்பில் ஆா்வம் காட்டி 60 சிட்டுக் குருவிகளை தனது வீட்டில் வளா்க்கும் பரணி பாா்க் பள்ளி மாணவி குஜிலியம்பாறை நந்தாவைப் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. பின்னா் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதியேற்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பரணி வித்யாலயா முதல்வா் எஸ். சுதாதேவி வரவேற்றாா். பரணி பாா்க் பள்ளி முதல்வா் எம். சேகா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com