கரூரில் தவறிவிழுந்து இறந்த மூதாட்டி குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கரூா் தாந்தோணிமலை புனித தெரசாள் பள்ளி முன்பு 55 வயது மதிக்கத்தக்க மூதாட்டி போதையில் ஞாயிற்றுக்கிழமை மயங்கிக்கிடந்துள்ளாா். இதனைக் கண்ட தாந்தோணிமலை கிராம நிா்வாக அலுவலா் சரவணன் தாந்தோணிமலை போலீஸில் புகாா் செய்தாா். போலீஸாா் சம்பவ இடத்திற்குவந்து மூதாட்டியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பெற்ற மூதாட்டி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். தாந்தோணிமலை போலீஸாா் வழக்குப் பதிந்து மேலும் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.