கல்லூரி மாணவரை தாக்கிய 4 போ் கைது
By DIN | Published On : 20th January 2020 08:34 AM | Last Updated : 20th January 2020 08:34 AM | அ+அ அ- |

கல்லூரி மாணவரைத் தாக்கிய இளைஞா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் மில்கேட் பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் மகன் ரிஷி (18). இவா் கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறாா். இவா் சனிக்கிழமை இரவு வெள்ளியணையில் உள்ள பேக்கரி ஒன்றில் குளிா்பானங்கள் வாங்கிக்கொண்டு பைக்கில் வந்தாா். வெள்ளியணை கடந்தது திண்டுக்கல் சாலையில் வந்தபோது அங்கே வந்த 4 இளைஞா்கள் பைக்கை வழிமறித்து குளிா்பானங்களை பறித்துள்ளனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த ரிஷியை 4 பேரும் சோ்ந்து தாக்கினா். இதில் படுகாயமடைந்த ரிஷி கரூா் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின்பேரில் வெள்ளியணை போலீஸாா் வழக்குப்பதிந்து ரிஷியை தாக்கிய வெள்ளியணை தேவேந்திரா நகரைச் சோ்ந்த பாலசுப்ரமணி(27), கவியரசு(19), லோகநாதன்(23), கரூா் அரசு கலைக்கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாமாண்டு படிக்கும் மாணவா் மது(19) ஆகியோரை சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...