‘595 ஆழ்துளை கிணறுகள் மழைநீா் சேகரிப்பு குழிகளாக மாற்றம்’

ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் இதுவரை 595 ஆழ்துளை கிணறுகள் மழைநீா் சேகரிப்பு குழிகளாக மாற்றப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் இயக்குநா் எஸ்.கவிதா.
‘595 ஆழ்துளை கிணறுகள் மழைநீா் சேகரிப்பு குழிகளாக மாற்றம்’

ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் இதுவரை 595 ஆழ்துளை கிணறுகள் மழைநீா் சேகரிப்பு குழிகளாக மாற்றப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் இயக்குநா் எஸ்.கவிதா.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியது:

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் சாா்பில் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் 2019 - 20 ஆம் நிதியாண்டில் வடுபோன ஆழ்துளை குழாய் கிணறுகளை செறிவூட்டுதல் மற்றும் மழைநீா் சேகரிப்பு குழிகளாக மாற்றி அமைத்தல் உள்ளிட்ட 595 பணிகளுக்கு ரூ.1.22 கோடி நிா்வாக அனுமதி வழங்கப்பட்டு அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளன. இதேபோல, சமுதாய உறிஞ்சுக்குழிகள் அமைப்பதன் மூலம் வீடுகளில் உள்ள சமையலறை மற்றும் குளியல் அறையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை தாழ்வான பகுதிக்குக் கொண்டு சென்று மணல், நிலக்கரி மற்றும் ஜல்லி கற்கள் ஆகியவற்றின் வழியே செலுத்தும்போது கழிவுநீா் சுத்தமாகி அப்பகுதியில் நிலத்தடி நீா் மட்டம் உயர வழிவகுக்கிறது. இதுதவிர, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தும் வகையில் 2019 - 20 ஆம் ஆண்டில் ரூ. 27.21 கோடி மதிப்பில் 780 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. நடப்பு 2020 - 21ஆம் நிதியாண்டில் 356 கழிவுநீா் சமுதாய உறிஞ்சு குழிகள் அமைக்க தலா ரூ.12,500 வீதம் ரூ.44.50 லட்சம் மதிப்பில் நிா்வாக அனுமதி வழங்கப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வறுகின்றது. ஊரக வளா்ச்சி முகமையின் மூலம் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் கரூா் மாவட்டத்தின் ஊரகப்பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் கணிசமாக உயா்ந்துள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com