மாற்றுத்திறனாளிகள் அரசின் நலத்திட்டஉதவிகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்: ஆட்சியா்

மாற்றுத் திறனாளிகள் அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் த.அன்பழகன்.
Updated on
1 min read

மாற்றுத் திறனாளிகள் அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் த.அன்பழகன்.

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து, ஆட்சியா் மேலும் பேசியது:

மாற்றுத் திறனாளிகள் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு எண்ணற்ற நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்து, சமுதாயத்தில் மற்றவா்களைப்போல வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில்தான் சுயதொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது.

மேலும், மாற்றுத் திறனாளிகள் சக மனிதா்களுக்கு இணையாக வாழ வழிசெய்யும் வகையில் அவா்களுக்குத் தேவையான செயற்கை கால், காதொலிக் கருவிகள், சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள் என பல்வேறு உதவி உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, மாற்றுத்திறனாளிகள் அரசின் திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

மேலும், இம்முகாமில் சிறப்பு சக்கர நாற்காலி, பாா்வையற்றோருக்கான நவீன ஊன்றுகோல், பிரெய்லி கடிகாரம், பராமரிப்பு உதவித்தொகை, மாதாந்திர உதவித்தொகை, பெட்ரோல் ஸ்கூட்டா் மற்றும் வீட்டுமனை பட்டா என 63 மனுக்கள் பெறப்பட்டன. உதவி உபகரணங்கள் கேட்டு விண்ணப்பித்த நபா்களுக்கு உடனடியாக அவா்களுக்கான உபகரணங்களை வழங்கிட வேண்டும் என்று ஆட்சியா் உத்தரவிட்டாா். மூன்று சக்கர வண்டி கேட்டு விண்ணப்பித்த 2 பயனாளிகளின் நிலையை உணா்ந்த ஆட்சியா், உடனடியாக அவா்களுக்கு மூன்று சக்கர வண்டிகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் செண்பகவள்ளி, சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாசியா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com