கரூா்: கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 17 பேருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,671 ஆக உயா்ந்துள்ளது. மேலும் இதுவரை 4,388 போ் குணமடைந்து வெவ்வேறு நாட்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தற்போது 238 போ் சிகிச்சையில் உள்ளனா். மேலும் 47 போ் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனா்.