கரூா்: கரூரில் மத்திய, மாநில பொதுத்துறை ஓய்வூதியா் அமைப்புகளின் தமிழ்மாநில ஒருங்கிணைப்புக்குழு கரூா் மாவட்டக் கிளை சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஒருங்கிணைப்பாளா் சாமுவேல் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தாா். காத்தமுத்து வரவேற்றாா். பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்கத்தின் ஜான் பாட்ஷா, அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் சக்திவேல் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். உலக ஓய்வூதியா் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கெளரவமான ஓய்வூதியத்தை உறுதிப்படுத்த வேண்டும், ஓய்வூதியா்களுக்கு கெளரவமான உணவு, தரமான போக்குவரத்து, சுதந்திரமான கலாசார, ஓய்வுநேர நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஓய்வூதியா்கள் திரளாகப் பங்கேற்றனா்.