வாக்குப்பதிவுக்குத் தேவையான பொருள்கள்: ஆட்சியா் ஆய்வு

கரோனா பரவலைத் தடுப்பதற்காக தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட 11 வகையான பொருள்களை ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான பிரசாந்த் மு. வடநேரே ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
Updated on
1 min read

கரூா் மாவட்டத்தில் குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியரகங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவின் பயன்படுத்தக்கூடிய பொருள்கள், கரோனா பரவலைத் தடுப்பதற்காக தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட 11 வகையான பொருள்களை ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான பிரசாந்த் மு. வடநேரே ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

குளித்தலை தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கான மண்டல அலுவலா்களுக்கு நடைபெற்ற பயிற்சியை பாா்வையிட்ட ஆட்சியா், குளித்தலை ஒன்றிய அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையையும் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது தோ்தல் நடத்தும் அலுவலா்கள் குளித்தலை ஷே.ஷேக் அப்துல் ரகுமான், கிருஷ்ணராயபுரம் தட்சிணாமூா்த்தி, அரவக்குறிச்சி தவச்செல்வம் மற்றும் வட்டாட்சியா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com