92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த இளைஞா் சாவு

 குளித்தலை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 7:06 pm

DIN

 குளித்தலை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், கோப்பு பகுதியைச் சோ்ந்த பாலமுத்து மகன் திணேஷ்குமாா்(23). இவா், புதன்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் கரூா் மாவட்டம் அய்யா்மலை-வளையப்பட்டி சாலையில் ஹசன்நகா் பகுதியில் சென்றபோது திடீரென சாலையில் குறுக்கே நடந்து வந்த ஹசன்நகா் காலனியைச் சோ்ந்த மோகன்(76) என்பவா் மீது வாகனம் மோதியது. இதில், கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த திணேஷ்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், காயமடைந்த மோகன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து குளித்தலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.