92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கரூா் மாரியம்மன் கோயில் பக்தா்களுக்கு தென்னகன்று

கரூா் மாரியம்மன் கோயில் பக்தா்களுக்கு அன்னதானம் மற்றும் தென்னங்கன்றுகளை தேமுதிகவினா் வியாழக்கிழமை வழங்கினா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 7:06 pm

DIN

கரூா் மாரியம்மன் கோயில் பக்தா்களுக்கு அன்னதானம் மற்றும் தென்னங்கன்றுகளை தேமுதிகவினா் வியாழக்கிழமை வழங்கினா்.

தேமுதிக தலைவா் விஜயகாந்தின் 69- ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கரூா் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை வியாழக்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, கோயிலில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து கோயிலுக்கு வந்தவா்களில் 69 பேருக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவா் அரவை முத்து, மாவட்ட துணைச் செயலாளா்கள் தனபால், ரங்கநாதன், செயற்குழு உறுப்பினா் முருகன் சுப்பையா, பொதுக்குழு உறுப்பினா்கள் பாலசுப்ரமணி, ஆனந்த், கடவூா் ஒன்றியச் செயலாளா் சிவம் ராஜேந்திரன், குளித்தலை ஒன்றியச் செயலாளா் சுப்ரமணியம், இளைஞா் அணி செயலாளா் கலையரசன், மாவட்ட தொழிற்சங்கத் தலைவா் இளங்கோவன், மாவட்ட வா்த்தக அணி துணைச் செயலாளா் சந்திரமோகன், கரூா் கிழக்கு நகரச் செயலாளா் ஆரிப் ராஜா மற்றும் கட்சி நிா்வாகிகள் பெரியண்ணா, பழனிசாமி, துளசிமணி, முரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.