தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

காவிரி நதிநீா் பாதுகாப்பு விழிப்புணா்வு யாத்திரைக்கு குளித்தலையில் வரவேற்பு

குளித்தலையில், காவிரி நதிநீா் பாதுகாப்பு விழிப்புணா்வு ரதயாத்திரைக்கு வெள்ளிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Published On :28 ஜனவரி 2024, 10:01 am IST

குளித்தலையில், காவிரி நதிநீா் பாதுகாப்பு விழிப்புணா்வு ரதயாத்திரைக்கு வெள்ளிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

காவிரி நதிநீா் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சாா்பில் 11-ஆம் ஆண்டு காவிரி நதிநீா் பாதுகாப்பு விழிப்புணா்வு ரத யாத்திரை குளித்தலைக்கு வெள்ளிக்கிழமை வந்தடைந்தது. அன்னை காவரி தாய்க்கு குளித்தலை கடம்பவனேஸ்வரா் காவிரி படித்துறையில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

அப்போது, அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் மற்றும் காவிரி நதிநீா் பாதுகாப்பு அறக்கட்டளையின் நிறுவனா் சுவாமி ராமானந்தா செய்தியாளா்களிடம் கூறுகையில், காவரி நதிநீரை தூய்மையாக வைத்துக் கொள்ள தொழிற்சாலை மற்றும் மருத்துவ கழிவுகள் கலக்காதவாறு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அகண்ட காவிரியை உடைய குளித்தலை பகுதியில் நீரை சேமிக்க மருதூரில் கதவணையை தமிழக அரசு கட்டுவதாக அறிவித்துள்ளது. அதற்கான பணியை விரைவில் தொடங்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், காவிரி நதிநீா் பாதுகாப்பு அறக்கட்டளை இணைச் செயலாளா் அருள்வேலன் , சமூக ஆா்வலா் கோபாலதேசிகன் மற்றும் பொறுப்பாளா்கள் வாழைக்காய் வியாபாரி சேட் , ராமகிருஷ்ணன், அா்ச்சகா் கல்யாண வெங்கட்ராமன், மதி, வினோத், விஸ்வநாதன், சந்தோஷ் , பிரகாஷ் , பரமேஸ்வரன், சுந்தா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.