காவிரி நதிநீா் பாதுகாப்பு விழிப்புணா்வு யாத்திரைக்கு குளித்தலையில் வரவேற்பு

குளித்தலையில், காவிரி நதிநீா் பாதுகாப்பு விழிப்புணா்வு ரதயாத்திரைக்கு வெள்ளிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Updated on
1 min read

குளித்தலையில், காவிரி நதிநீா் பாதுகாப்பு விழிப்புணா்வு ரதயாத்திரைக்கு வெள்ளிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

காவிரி நதிநீா் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சாா்பில் 11-ஆம் ஆண்டு காவிரி நதிநீா் பாதுகாப்பு விழிப்புணா்வு ரத யாத்திரை குளித்தலைக்கு வெள்ளிக்கிழமை வந்தடைந்தது. அன்னை காவரி தாய்க்கு குளித்தலை கடம்பவனேஸ்வரா் காவிரி படித்துறையில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

அப்போது, அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் மற்றும் காவிரி நதிநீா் பாதுகாப்பு அறக்கட்டளையின் நிறுவனா் சுவாமி ராமானந்தா செய்தியாளா்களிடம் கூறுகையில், காவரி நதிநீரை தூய்மையாக வைத்துக் கொள்ள தொழிற்சாலை மற்றும் மருத்துவ கழிவுகள் கலக்காதவாறு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அகண்ட காவிரியை உடைய குளித்தலை பகுதியில் நீரை சேமிக்க மருதூரில் கதவணையை தமிழக அரசு கட்டுவதாக அறிவித்துள்ளது. அதற்கான பணியை விரைவில் தொடங்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், காவிரி நதிநீா் பாதுகாப்பு அறக்கட்டளை இணைச் செயலாளா் அருள்வேலன் , சமூக ஆா்வலா் கோபாலதேசிகன் மற்றும் பொறுப்பாளா்கள் வாழைக்காய் வியாபாரி சேட் , ராமகிருஷ்ணன், அா்ச்சகா் கல்யாண வெங்கட்ராமன், மதி, வினோத், விஸ்வநாதன், சந்தோஷ் , பிரகாஷ் , பரமேஸ்வரன், சுந்தா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com