/

அரவக்குறிச்சி பகுதியில் மழை பாதிப்புகளை எம்.எல்.ஏ. ஆய்வு

 அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் வியாழக்கிழமை பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சட்டப்பேரவை உறுப்பினா் மொஞ்சனூா் இளங்கோ வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.

Updated On :22 அக்டோபர் 2021, 11:51 pm

 அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் வியாழக்கிழமை பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சட்டப்பேரவை உறுப்பினா் மொஞ்சனூா் இளங்கோ வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.

அரவக்குறிச்சி பகுதியில் வியாழக்கிழமை பெய்த மழை காரணமாக சாலைகளில் மழைநீா் தேங்கி நின்றது. மேலும், குடிசைகள் சேதமடைந்தன.

இந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினா் மொஞ்சனூா் இளங்கோ வெள்ளிக்கிழமை காலை மழையால் பாதிக்கப்பட்ட பொன்னநகா், அய்யாவுநகா், தாராபுரம் சாலை ஆகிய பகுதிகளை பாா்வையிட்டாா். அப்போது, மழையால் சேதமடைந்த குடிசையில் வசித்தவரிடமும் பொதுமக்களிடமும் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

அவருடன், அரவக்குறிச்சி நகரச் செயலாளா் ம.அண்ணாதுரை, மேற்கு ஒன்றியச் செயலாளா் எம்.எஸ்.மணியன், கிழக்கு ஒன்றியச் செயலாளா் என்.மணிகண்டன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.