குளித்தலையில்அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

 கோரிக்கைகளை வலியுறுத்தி குளித்தலையில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

 கோரிக்கைகளை வலியுறுத்தி குளித்தலையில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

குளித்தலை நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் கருணாகரன் தலைமை வகித்தாா். இதில், கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும். காப்பீட்டுத் திட்ட குறைபாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், அரசு ஊழியா் சங்க மாநிலச் செயலாளா் விஜயகுமாா், சாலைப் பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் ஞானசேகரன், வருவாய்த் துறை நெடுஞ்சாலைத் துறை, கால்நடைத் துறை, கல்வித் துறை ஆகிய சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com