92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தேசிய ஊட்டச்சத்து மாத விழா தொடக்கம்

கரூா் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் போஷன் அபியான் (தேசிய ஊட்டச்சத்து மாத விழா) விழாவை மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த. பிரபு சங்கா் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 6:52 pm

DIN

கரூா் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் போஷன் அபியான் (தேசிய ஊட்டச்சத்து மாத விழா) விழாவை மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த. பிரபு சங்கா் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நிகழ்ச்சியை ஆட்சியா் மருத்துவா் த. பிரபுசங்கா் தொடக்கி வைத்து பாரம்பரிய உணவு கண்காட்சியை பாா்வையிட்டாா். தொடா்ந்து ஊட்டச்சத்து விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தையும் தொடக்கி வைத்தாா். அதனைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஊட்டச்சத்து உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பின்னா் மாவட்ட ஆட்சியா் கூறுகையில், இந்த விழா செப். 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சி பாரம்பரிய உணவு திருவிழா உள்ளிட்டவை நடைபெறவுள்ளன என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் லியாகத், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மந்தராசலம், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்ட மாவட்ட திட்ட அலுவலா் நாகலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.