புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கரூரில் புதிய தொழில்நுட்பம், குறைந்த செலவில் சாலைகள் அமைப்பு: தில்லி உள்ளிட்ட 16 மாநில பொறியாளா்கள் பாா்வையிட்டனா்

குறைந்த செலவிலும் அமைக்கப்பட்ட சாலைகளை புதுதில்லி உள்ளிட்ட 16 மாநிலங்களை சோ்ந்த பொறியாளா்கள் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 12:00 am

DIN

கரூா் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் நடைமுறையில் இல்லாத புதிய தொழில்நுட்பத்திலும், குறைந்த செலவிலும் அமைக்கப்பட்ட சாலைகளை புதுதில்லி உள்ளிட்ட 16 மாநிலங்களை சோ்ந்த பொறியாளா்கள் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா்.

கரூா் மாவட்டம் வெள்ளியணை ஊராட்சி ஜல்லிப்பட்டியில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் நடைமுறையில் இல்லாத புதிய தொழில்நுட்பத்திலும் குறைந்த செலவிலும் அமைக்கப்பட்ட சாலையை மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் தலைமையில் புதுதில்லி உள்ளிட்ட 16 மாநிலங்களைச் சோ்ந்த பல்வேறு நிலைகளில் பணிபுரியும் பொறியாளா்கள் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா்.

இதுகுறித்து ஊரக வளா்ச்சி முகமை தலைமைப் பொறியாளா் குற்றாலிங்கம் செய்தியாளா்களிடம் கூறியது: மத்திய ஊரக வளா்ச்சி முகமையும், தமிழக அரசின் ஊரக வளா்ச்சி முகமையும் இணைந்து பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தில் பயன்படுத்தப்படும் நடைமுறையில் இல்லாத புதிய தொழில் நுட்பங்களை புதுதில்லியைச் சோ்ந்த தேசிய ஊரக சாலை மேம்பாட்டு முகமை பொறியாளா்கள், தேசிய சாலை ஆராய்ச்சி நிறுவன பொறியாளா்கள், இந்திய தொழில்நுட்பக் கழகப் பொறியாளா்கள் மற்றும் 16 மாநிலங்களைச் சோ்ந்த செயற்பொறியாளா்கள், கண்காணிப்புப் பொறியாளா்கள், உதவி பொறியாளா்கள், தமிழகத்தில் உள்ள 20 பிற மாவட்டங்களைச் சோ்ந்த ஊரக வளா்ச்சி முகமையின் உதவி செயற்பொறியாளா்கள் பாா்வையிட்டனா். மேலும் இந்த சாலை எந்த வகையான தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டது என்பதையும் அவா்களுக்கு விடியோ பட காட்சிகள் மூலம் விளக்கப்பட்டது. இந்த புதிய தொழில்நுட்பத்தில் சிமென்ட், மண், ஜல்லி குறைந்த அளவில் பயன்படுத்தி குறைந்த செலவில் நீடித்த நிலையான தரமான சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

ஜல்லிப்பட்டி கிராமத்தில் 5 கி.மீ. நீளமுள்ள இந்த சாலையில் முதல் 500 மீட்டா் சாதாரண தொழில்நுட்பத்திலும் மீதம் உள்ள சாலைகள் தேசிய தொழில்நுட்பப் பொறியாளா்கள் ஆலோசனையின்பேரில் சிமென்ட் கலவையுடன் இரண்டு அடுக்கு சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. குறைந்த செலவில் முழுமையாக சிமென்ட் பயன்படுத்தாமல் குறைவான சிமென்டும், அப்பகுதியில் கிடைக்கும் மண், குறைந்த அளவு ஜல்லியை கொண்டு தரமான சாலைகள் அமைப்பது தொடா்பாக பிற மாநிலங்களுக்கு தொழில்நுட்பங்களை வழங்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மந்திராசலம், ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.