வாங்கல் அருகே சேவல் சண்டை: இருவா் கைது
By DIN | Published On : 20th August 2021 01:06 AM | Last Updated : 20th August 2021 01:06 AM | அ+அ அ- |

வாங்கல் அருகே சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், வாங்கல் அருகே பெரியகாளிபாளையத்தில் சிலா் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக வாங்கல் போலீஸாருக்கு புதன்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்குச் சென்று சோதனையிட்டபோது, சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியைச் சோ்ந்த அரவிந்த்(20), அரவிந்த்குமாா்(19) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்த இரு சேவல்களையும் பறிமுதல் செய்தனா்.