கோயில்களில் பணியாளா்கள் கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும் என கரூா் திருக்குறள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, கரூா் திருக்குறள் பேரவைச் செயலாளா் மேலை பழநியப்பன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபுவுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது: இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான சில கோயில்களில் அா்ச்சகா்கள், பணியாளா்கள், அலுவலா்களிடையே மாறுபட்ட கருத்துவேறு காணப்படுவதால் பக்தா்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இவற்றைப் போக்க கோயில்களில் கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.