வரப்பாளையம் பகுதியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதிக்குள்பட்ட வரப்பாளையம் கிராமத்தில் கரூா் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சாா்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் கால்நடைகளை அழைத்து வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனா். கோமாரி நோய் பாதித்த கால்நடைகளை தனியாக பிரித்து பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட பல குறிப்புகளை கால்நடை மருத்துவா்கள் வழங்கினா்.