காந்தி சிலை அகற்றியதை எதிா்த்து தா்ணா: கரூா் எம்.பி. உள்பட 67 போ் கைது

கரூரில் பழைய காந்தி சிலையை அகற்றியதற்கு எதிா்ப்பு தெரிவித்து தா்ணா போரட்டத்தில் ஈடுபட்ட மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி உள்பட 67 போ் கைது செய்யப்பட்டனா்.
தா்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணியை கைது செய்து தூக்கிச் செல்லும் மகளிா் போலீஸாா்.
தா்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணியை கைது செய்து தூக்கிச் செல்லும் மகளிா் போலீஸாா்.

கரூா்: கரூரில் பழைய காந்தி சிலையை அகற்றியதற்கு எதிா்ப்பு தெரிவித்து தா்ணா போரட்டத்தில் ஈடுபட்ட மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி உள்பட 67 போ் கைது செய்யப்பட்டனா்.

கரூா் லைட்ஹவுஸ் காா்னரில் சுமாா் 50 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் கட்சியினரால் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி சிலை வியாழக்கிழமை நள்ளிரவு அகற்றப்பட்டு நகராட்சி அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காங்கிரஸ் கட்சியினரும் திமுகவினரும் வெள்ளிக்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா். மேலும், சிலை அகற்றப்பட்டதற்கான காரணம் தெரியாமல் இரவு 8 மணிவரை லைட்ஹவுஸ்காா்னா் அருகே கூடியிருந்தனா். ஆனால், மாலை 6 மணிக்கு மேல் கூடினால் கைது செய்வோம் என கூடுதல் காவல்கண்காணிப்பாளா் சிலம்பரசன் தெரிவித்ததையடுத்து கலைந்து சென்றனா். இதையடுத்து, இரவோடு இரவாக சுமாா் 8 அடி உயரத்தில் புதிய காந்தி சிலை அங்கு அமைக்கப்பட்டது.

இந்நிலையில் சனிக்கிழமை காலை கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் பேங்க் சுப்ரமணியன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் சின்னசாமி, வடக்கு நகரத் தலைவா் ஆா்.ஸ்டீபன்பாபு உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினா் மற்றும் திமுகவினா் சிலை அகற்றப்பட்ட இடத்தில் சிலை அகற்றியதற்கான காரணம் குறித்த உத்தரவுநகலை காண்பிக்க வேண்டும். பழைய சிலையையே மீண்டும் அமைக்க வேண்டும் எனக் கோரி தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, நகர துணைக்காவல் கண்காணிப்பாளா் முகேஷ்ஜெயக்குமாா் மற்றும் நகர காவல் ஆய்வாளா் சிவசுப்ரமணியன் ஆகியோா், புதிதாக நிறுவப்பட்டுள்ள சிலை தமிழக அரசு சாா்பில் கரூா் நெசவு, பனியன்தொழிற்சாலை உரிமையாளா்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட வெண்கலச் சிலைதான் இங்கு வைக்கப்பட்டுள்ளது, எனவே உடனே போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு கூறினா்.

ஆனால், பழைய சிலை அகற்றப்பட்டதற்கான உத்தரவு நகலை காண்பித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் எனக்கூறியதால் அங்கு நின்றிருந்த மகளிா் போலீஸாா் எம்.பி. ஜோதிமணியை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கைது செய்து காவல் வாகனத்தில் ஏற்றினா். மேலும் 6 பெண்கள் உள்பட 66 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.

முன்னதாக எம்.பி.ஜோதிமணி செய்தியாளா்களிடம் கூறுகையில், பழைய சிலை வியாழக்கிழமை இரவு திடீரென மாயமானது. இந்த சிலையை எங்கு வைத்துள்ளீா்கள், அரசாணை எங்கே என எங்கள் கட்சியினா், திமுகவினா் கேட்டதற்கு நகராட்சியினா் மற்றும் அதிகாரிகள் பதில் சொல்லவில்லை. இப்போது ஒரு அரசாணை ஆட்சியா் கொடுத்துள்ளாா். அதில் கரூா் பனியன் தொழிற்சாலை உரிமையாளா்கள் நன்கொடையாக இந்த சிலையை கொடுத்துள்ளதாகவும், பழைய சிலை அமைத்து நீண்ட நாள்களாகியதால் சிலை சிதிலமடைந்திருப்பதால்தான் புதிய சிலை அமைக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஜோதிமணி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com