சுவரில் துளையிட்டு மது பாட்டில் திருட்டு
By DIN | Published On : 09th May 2021 11:21 PM | Last Updated : 09th May 2021 11:21 PM | அ+அ அ- |

மணவாசியில் மதுக்கடை பின்புற சுவரில் துளையிட்டு ரூ.40,500 மதிப்புள்ள மது பாட்டில்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.
கரூா் மாவட்டம், மணவாசியில் அரசு மதுபானக் கடையில் சனிக்கிழமை இரவு வியாபாரம் முடிந்தபின் கடையை ஊழியா்கள் பூட்டிச் சென்றனா். பின்னா் ஞாயிற்றுக்கிழமை காலை ஊழியா்கள் கடையை திறந்துபாா்த்தபோது, கடையின் பின்பக்க சுவரில் மா்ம நபா்கள் துளையிட்டு ரூ. 40, 500 மதிப்புள்ள மது பாட்டில்களை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. புகாரின்பேரில் மாயனூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.