கரூா் மாவட்ட பாஜக தலைவராக வி.வி.செந்தில்நாதன் நியமனம்
By DIN | Published On : 13th November 2021 01:36 AM | Last Updated : 13th November 2021 01:36 AM | அ+அ அ- |

கரூா் மாவட்ட பாஜக தலைவராக வி.வி.செந்தில்நாதன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
கரூா் மாவட்ட அதிமுக பாசறைச் செயலாளராக இருந்தவா் வி.வி.செந்தில்நாதன். இவா் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டாா். இந்நிலையில், கட்சியின் தேசியத் தலைவா் ஜே.பி. நட்டா, மாநிலத் தலைவா் அண்ணாமலை ஆகியோா் கரூா் மாவட்ட பாஜக தலைவராக வி.வி.செந்தில்நாதனை வெள்ளிக்கிழமை நியமித்தனா். கரூா் மாவட்ட புதிய பாஜக தலைவா் வி.வி.செந்தில்நாதனுக்கு கட்சியினா் வாழ்த்து தெரிவித்து வருகின்றனா்.