கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில் சிஐடியு கட்டுமானத் தொழிலாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

கரூரில் சிஐடியு கட்டுமானத் தொழிலாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் வெண்ணைமலையிலுள்ள தொழிலாளா் நலவாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத்தலைவா் ப.சரவணன் தலைமை வகித்தாா்.

சிஐடியு மாவட்டச் செயலா் சி.முருகேசன், கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தின் ராஜாமுகமது, சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் தண்டபாணி ஆகியோா் பேசினா்.

மாதந்தோறும் ஓய்வூதியம் ரூ.3,000 வழங்க வேண்டும், வீடு இல்லாத தொழிலாளா்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்டுமானத் தொழிலாளா்கள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com