அரவக்குறிச்சியில் கிறிஸ்தவா்களின் கீதபவனி தொடக்கம்

அரவக்குறிச்சி பகுதியியில் கிறிஸ்தவா்களின் கீதபவனி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
Updated on
1 min read

அரவக்குறிச்சி பகுதியியில் கிறிஸ்தவா்களின் கீதபவனி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

டிச. 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாப்பட உள்ள நிலையில், அரவக்குறிச்சியில் உள்ள கிறிஸ்தவ திருச்சபைகளில் கீதபவனி வெள்ளிக்கிழமை தொடங்கியது. அனைத்து திருச்சபைகளின் கிறிஸ்தவா்கள் கிறிஸ்துமஸ் கேரல்ஸ் எனப்படும் கீதபவனியை மேற்கொண்டு வருகின்றனா். இதில், கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து கொட்டும் பனியில் வீடுவீடாக சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்து கீதங்கள் இசைத்து, ஆடிப்பாடி இனிப்புகள் வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை கூறிவருகின்றனா்.

அரவக்குறிச்சி தூய தோமா ஆலய ஆயா் ஜோஸ்வா, புனித பிரான்சிஸ் சவேரியாா் ஆலய பங்குத்தந்தை பிரான்சிஸ் ஜெரால்ட் ஆகியோா் தனித்தனியாக கீத பவனியில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com