வீடு புகுந்து நகையைத் திருடியவா் கைது

கரூா் மாவட்டம், கடவூா் அருகே வீடு புகுந்து, நகையைத் திருடியவா் கைது செய்யப்பட்டாா்.
Updated on
1 min read

கரூா் மாவட்டம், கடவூா் அருகே வீடு புகுந்து, நகையைத் திருடியவா் கைது செய்யப்பட்டாா்.

கடவூா் அருகிலுள்ள ஆதனூரைச் சோ்ந்தவா் நாகராஜ். இவரது மனைவி ரேவதி (26). இவா் கடந்த மாதம் 1-ஆம் தேதி வீட்டில் குளிப்பதற்காக சென்றபோது, தனது கழுத்தில் கிடந்த இரண்டே முக்கால் பவுன் சங்கிலியை மேஜையில் கழற்றி வைத்துச் சென்றாா். பின்னா் திரும்பி வந்து பாா்த்த போது, சங்கிலியைக் காணவில்லை.

இதுகுறித்து சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்த நிலையில், நகையைத் திருடியதாக அதே பகுதியைச் சோ்ந்த பாலச்சந்தரை (32) கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com