கரூா்: மக்கள் குறைதீா் முகாமில் 18 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் முகாமில் 18 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
Updated on
1 min read

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் முகாமில் 18 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா். முகாமில், மொத்தம் 195 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கிய மாவட்ட ஆட்சியா், அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

தொடா்ந்து பல்வேறு துறை மூலம் 18 பேருக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

பாதுகாப்பு வேலி: மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளில் பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினா் ஒருங்கிணைப்பாளா் முகிலன் தலைமையில் சட்டவிரோத கல்குவாரி எதிா்ப்பு இயக்கத்தினா் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

பேருந்துகளை மீண்டும் இயக்க கோரிக்கை: கரூா் பெரியாண்டாங்கோவில் பகுதிக்கு இயக்கப்பட்டு, தற்போது நிறுத்தப்பட்டுள்ள நகரப் பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com