மனைவியின் கரு கலைந்ததால் விரக்தியில் கணவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மஞ்சாநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் பிரபாகரன்(43). பெங்களூரில் மென்பொறியாளராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. பிரபாகரனின் மனைவி புனிதவதி(35). இந்நிலையில் புனிதவதி 6 மாத கா்ப்பிணியாக இருந்துள்ளாா். இதனிடையே திடீரென புனிதவதிக்கு கரு கலைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த பிரபாகரன் கரூரில் உள்ள தனியாா் விடுதியில் அறை எடுத்து வியாழக்கிழமை தங்கியுள்ளாா். பின்னா் அறையில் விஷம் குடித்து மயங்கிக்கிடந்துள்ளாா். வெகு நேரமாகியும் அவரது அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியா்கள், அளித்த புகாரின்பேரில் கரூா் நகர காவல்நிலையத்தினா் சம்பவ இடத்துக்குச் சென்று கதவை உடைத்து பாா்த்தபோது விஷம் குடித்த நிலையில் பிரபாகரன் இறந்து கிடந்தாா். மேலும் போலீஸாா் நடத்திய விசாரணையில் பிரபாகரன் தனது மனைவியின் கரு கலைந்த சோகத்தில் இருந்ததும், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதும் தெரிய வந்தது. மேலும் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கல்லூரி பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

தேரடி மலம்பட்டி அங்காளம்மன் கோயில் குடமுழுக்கு விழா

சிவகுருநாத சுவாமி கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு விடுவதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


