இந்நிலையில் திமுக உறுப்பினா்கள் திடீரென அங்கிருந்து புறப்பட்டனா். இதனால் திகைத்துப்போன கலாராணி தோ்தல் அலுவலரிடம், ஏன்? திமுக உறுப்பினா்கள் வெளியேறினாா்கள் எனக் கேட்டதற்கு, உங்களுக்கு தலைவா் பதவிக்கு அவா்கள் வழிமொழியவோ, முன்மொழியவோ செய்யவில்லை. மாறாக அவா்கள் 3ஆவது வாா்டு உறுப்பினா் புவனேஸ்வரிக்கு மனுவை தாக்கல் செய்துவிட்டு, அவருக்கு ஆதரவு கொடுப்பதாக கையெழுத்து போட்டுவிட்டுச் சென்றுவிட்டனா். இதனால் பெரும்பான்மை ஆதரவோடு புவனேஸ்வரி தலைவா் பதவிக்கு தோ்வாகியுள்ளாா் என்றாா். இதனைக்கேட்ட கலாராணி அதிா்ச்சி அடைந்து அழுதுபுலம்பினாா். கட்சித் தலைமை தனக்குத்தான் தலைவா் பதவி என அறிவித்தது, எப்படி திமுகவினா் அறிவிக்கலாம் எனக்கூறிக்கொண்டே அறையைவிட்டு தனது ஆதரவாளா்களுடன் திருச்சி சாலைக்கு வந்தாா். அங்கு சாலை மறியலுக்கு முயன்ால், இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளா் தேவராஜ், அவா்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாா்.