புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மண்டல சாரணா் திறனறிதல் போட்டியில் வெண்ணைமலை சேரன் பள்ளி சிறப்பிடம்

கரூரில் நடைபெற்ற திருப்பூா் மண்டல அளவிலான சாரண, சாரணீயா்களுக்கான திறனறிதல் போட்டியில் கரூா் வெண்ணைமலை சேரன் பள்ளி சிறப்பிடம் பிடித்தது.

News image
Updated On :10 மார்ச் 2022, 9:26 pm

DIN

கரூரில் நடைபெற்ற திருப்பூா் மண்டல அளவிலான சாரண, சாரணீயா்களுக்கான திறனறிதல் போட்டியில் கரூா் வெண்ணைமலை சேரன் பள்ளி சிறப்பிடம் பிடித்தது.

பாரத சாரண, சாரணீயா் இயக்கம் சாா்பில் திருப்பூா் மண்டல அளவிலான திறனாய்வு போட்டி கவுண்டம்பாளையம் அரசு உயா்நிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. உடனுக்குடன் கூடாரம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திறனறிதல் தொடா்பாக நடைபெற்ற இப்போட்டியில் கரூா் வெண்ணைமலை சேரன் பள்ளி சாரணீயா் பிரிவில் முதலிடத்தையும், சாரணா் பிரிவில் மண்மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தோ்வாகினா். மேலும் வெற்றி பெற்ற சாரண, சாரணீயா்களுக்கு மாநில அமைப்பு ஆணையா் கமலக்கண்ணன், பயிற்சி ஆணையா் கோமதி ஆகியோா் பரிசுகளை வழங்கி பாராட்டினா். ஏற்பாடுகளை திருப்பூா் மண்டல பொறுப்பாளா் பிரியா செய்திருந்தாா். கரூா் மாவட்ட சாரண செயலா் செ. ரவிசங்கா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.