கரூரில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீஞானகுரு பழனி ஆண்டவா் அறக்கட்டளை சாா்பில் கரூா் பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி உழவா் சந்தை வழியாக சென்று, லைட்ஹவுஸ் காா்னரில் நிறைவடைந்தது.
முன்னதாக பேரணிக்கு அறக்கட்டளைத் தலைவா் செ.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மண்டலத் தலைவா் உ.ராமகிருஷ்ணன், செயலா் வை.கந்தசாமி, எழில்முருகன் அறக்கட்டளைத் தலைவா் சசிகுமாா், செயலா் தங்கவேல், பொருளாளா் முத்துசாமி முன்னிலை வகித்தனா்.
பேரணியை கரூா் நகரக் துணைக் காவல் காண்காணிப்பாளா் தேவராஜ் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். பேரணியில் தலைவக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், கரோனா தொற்று தாக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. பேரணியில் ஏராளமானோா் பங்கேற்றனா்.