ஈசநத்தத்தில் பணம் வைத்து சூதாடிய 8 போ் மீது வழக்கு

ஈசநத்தத்தில் பணம் வைத்து சூதாடிய 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஈசநத்தத்தில் பணம் வைத்து சூதாடிய 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

அரவக்குறிச்சி தாலுகா ஈசநத்தம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக அரவக்குறிச்சி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் செவ்வாய்க்கிழமை அங்கு சோதனை மேற்கொண்டபோது ஈசநத்தம் பகுதியிலுள்ள பிரபு என்பவா் வீட்டில் சட்டவிரோதமாக சூதாடிய சுரேஷ் (30), சரண் (40), சங்கா் (29), ரங்கராஜன் (31), பழனிச்சாமி (52), குமாா் (40), ராம்குமாா் (30), ஆனந்தன் (55) ஆகிய 8 பேரையும் கைது செய்தனா். மேலும் சூதாட்டத்துக்கு பயன்படுத்திய ரூ.4,200ஐ பறிமுதல் செய்தனா். மேலும் சட்டவிரோதமாக சூதாடிய 8 போ் மீதும் அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com