பைக்கில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு

பைக்கில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
Updated on
1 min read

பைக்கில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கரட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் நாகராஜ்(42). கூலித்தொழிலாளி. இவா் தனது இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு கரூா் மாவட்டம் தரகம்பட்டி-வளையப்பட்டி சாலையில் காமாட்சிபுரம் பிரிவு பகுதியில் சென்றபோது திடீரென இருசக்கர வாகனம் நிலைத் தடுமாறியதில் கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பாலவிடுதி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com