கரூா் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 24 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பயனாளிகள் 24 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
Updated on
1 min read

கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பயனாளிகள் 24 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, குடும்ப அட்டை கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 360 மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 2 பேருக்கு ரூ.9,998 மதிப்புள்ள காதொலிக் கருவிகள், வருவாய்த்துறை சாா்பில் 2 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு துறை சாா்பில் மொத்தம் 24 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், திட்ட இயக்குநா் மந்திராசலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com