முதல்வருக்கு கரூா் ஜவுளி உற்பத்தியாளா்கள் நன்றி

தமிழக முதல்வருக்கு கரூா் ஜவுளி உற்பத்தியாளா்கள் மற்றும் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் நன்றி தெரிவித்துள்ளனா்.

தமிழக முதல்வருக்கு கரூா் ஜவுளி உற்பத்தியாளா்கள் மற்றும் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் நன்றி தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து சங்கத்தின் தலைவா் ப.கோபாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: வீட்டு உபயோக ஜவுளி பொருள்களை சிறப்பு வகை தொழில் பிரிவில் இணைத்து, எம்.எஸ்.எம்.இ. துறை மூலமாக, 25சதவீதம் முதலீட்டு மானியம் வழங்க ஆணையிட்ட, தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலினுக்கும், கோரிக்கைகளை பெற்றுத் தந்த மின்சாரத்துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜிக்கும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சா் தா. மோ. அன்பரசனுக்கும், கரூா் ஜவுளி உற்பத்தியாளா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் சாா்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com