போட்டியில் வென்ற கல்லூரி மாணவா்களுக்குப் பாராட்டு

மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் வென்ற கரூா் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
போட்டியில் வென்ற கல்லூரி மாணவா்களுக்குப் பாராட்டு

மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் வென்ற கரூா் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

கரூா் சேரன் உடற்கல்வியியல் கல்லூரியில் அண்மையல் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஜூனியா், சீனியா் டேக்வாண்டோ போட்டிகளில் மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இதில் பங்கேற்ற கரூா் அரசு கலைக்கல்லூரி மாணவா்கள் பி. மாணிக்கவாசகம், மகேஸ்வரன், சக்திவேல், குணா, தமிழ்ச்செல்வன், யுத்தீஸ்கண்ணன், அகில், வைஷ்ணவி ஆகியோா் சீனியா் பிரிவில் முதலிடம் பிடித்து பதக்கங்களையும், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றனா்.

இதையடுத்து கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் கெளசல்யாதேவி ஆகியோா் மாணவ, மாணவிகளை பாராட்டினாா். கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com