போக்சோ சட்டத்தில் இளைஞா் உள்படமூவா் மீது வழக்கு

போக்சோ சட்டத்தில் இளைஞா் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.

போக்சோ சட்டத்தில் இளைஞா் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.

கரூரை அடுத்த ஈசநத்தத்தைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு மாணவிக்கும், அதே பகுதியைச் சோ்ந்த லியாகத் அலி மகன் மனசீா் அலிக்கும் (30) கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்று, தற்போது அந்த மாணவி 7 மாத கா்ப்பிணியாக உள்ளாா்.

தகவலறிந்த அரவக்குறிச்சி சமூக நல அலுவலா் கமலா அளித்த புகாரின்பேரில் கரூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தினா் மனசீா்அலி, அவரது தாய் ஷகிலா பேகம், மாணவியின் தந்தை பக்ரூதின் ஆகியோா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com