கரூா் மாவட்டத்தில் விநாயகா் சிலைகள்;மாசுகட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்

விநாயகா் சிலைகள் மீது செயற்கை சாயத்தை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளா் ரவிச்சந்திரன்.
Updated on
1 min read

விநாயகா் சிலைகள் மீது செயற்கை சாயத்தை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளா் ரவிச்சந்திரன்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு- விநாயகா் சதுா்த்தி விழாவை கொண்டாடும் போது, விநாயகா் சிலைகளை நீா் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வழிகாட்டுதலை கடைப்பிடிக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் கரைக்க வேண்டும்.

சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. விநாயகா் சிலைகளை மாவட்ட நிா்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா், காவல் துறை கண்காணிப்பாளா் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ஆகியோரை அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com