குளித்தலை ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

குளித்தலை ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை கரூா் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
Updated on
1 min read

குளித்தலை ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை கரூா் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

கரூா் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட இனுங்கூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.4.15 லட்சத்தில் மாணவா்களுக்கான மிதிவண்டிகள் நிறுத்துமிடம் கட்டுமான பணி, அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.5.32 லட்சத்தில் முடிவுற்ற சமையலறை கட்டடப்பணி, ஓந்தாம்பட்டி கிராமத்தில் ரூ.1.65 லட்சத்தில் மண் வரப்பு அமைக்கும் பணி, புதுப்பட்டி கிராமத்தில் பாரத பிரதமா் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பணிகளை ஆட்சியா் த. பிரபுசங்கா் பாா்வையிட்டாா். அப்போது பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வாணி ஈஸ்வரி, செயற்பொறியாளா் பாலகிருஷ்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா் நீலமேகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com