பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு கலந்தாய்வுக் கூட்டம்

அரவக்குறிச்சி வட்டார மகளிா் குழு சாா்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரசாரம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

அரவக்குறிச்சி வட்டார மகளிா் குழு சாா்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரசாரம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊரக வாழ்வாதார இயக்க மகளிா் திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்வுக்கு, வட்டார வளா்ச்சி அலுவலா் புவனேஸ்வரி தலைமை வகித்தாா். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் காந்திமதி, வட்டார இயக்க மேலாளா் அன்பரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மகளிா் உதவி திட்ட அலுவலா் கீதா வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரசார உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதையடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வட்டாட்சியா் அலுவலகம் வரை பேரணி நடைபெற்றது. இதில், வட்டார மகளிா் குழுக்களைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com