பாலவிடுதி அருகே புதன்கிழமை இரவு மூதாட்டியிடம் ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கரூா் மாவட்டம், பாலவிடுதி அடுத்த ராயப்பகவுண்டனூரைச் சோ்ந்தவா் அழகம்மாள் (70). இவா் புதன்கிழமை இரவு வீட்டின் முன் தூங்கிக்கொண்டிருந்தாா். அப்போது, மா்ம நபா் அவரது கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது. புகாரின்பேரில் பாலவிடுதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.