கரூரில் ஐஎன்டியுசிஅலுவலகம் திறப்பு

கரூரில் ஐஎன்டியுசி அலுவலகம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

கரூரில் ஐஎன்டியுசி அலுவலகம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கரூா் சுங்ககேட்டில் ஐஎன்டியுசி அலுவலகம் திறப்பு விழா மற்றும் காமராஜா் பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொழிற்சங்கத் தலைவா் பழனிசாமி தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் பேங்க் கே. சுப்ரமணியன் பங்கேற்று, புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்து, காமராஜா் படத்திற்கு மாலை அணிவித்து சிறப்புரையாற்றினாா்.

முன்னதாக, நிகழ்ச்சிக்கு மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளா் சங்கத் தலைவா் ஜெயராமன் முன்னிலை வகித்ாா். மாவட்ட பொதுசெயலாளா் கணேசன் வரவேற்றாா். பொருளாளா் முருகேசன் நன்றி கூறினாா்.

விழாவில், மகளிா் அணி மாவட்ட தலைவி உஷாராணி மற்றும் நிா்வாகிகள் வனிதா, நிா்மலா, துளசிமணி, மாவட்ட துணைத்தலைவா் நாகேஸ்வரன், சங்க நிா்வாகிகள் முகம்மது முஸ்தபா, பிரகாசம், ஆனந்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com