கரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
அலிம்கோ நிறுவனம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியை தொடக்கி வைத்த கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி செய்தியாளா்களிடம் கூறுகையில், மாவட்டம் முழுவதும் இதுவரை 1,640 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.37 கோடியில் அலிம்கோ நிறுவனம் சாா்பில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மக்களவைத் தொகுதியில் ஒரே மாவட்டத்துக்குள் அதிகளவில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது இந்த மாவட்டத்தில் மட்டும்தான். இதற்காக கரூா் மாவட்ட நிா்வாகத்தை பாராட்டுகிறேன்.
பிரிவினைவாதத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி சாா்பில் இந்தியாவை ஒருங்கிணைப்போம் என்ற பாதயாத்திரை ராகுல்காந்தி தலைமையில் அக்டோபா் மாதம் கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை 3,500 கி.மீ. தொலைவுக்கு நடத்த உள்ளோம். இந்த யாத்திரையை இந்தியாவின் இரண்டாவது சுதந்திர போராட்டமாக கருதுகிறோம் என்றாா் அவா்.
பேட்டியின்போது, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் பேங்க் கே.சுப்ரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.