அரவக்குறிச்சி பொன்நகா் பகுதியில் ஒரே தெருவில் உள்ள 4 வீடுகளில் சனிக்கிழமை அதிகாலை மா்ம நபா்கள் புகுந்து நகை, பணத்தைத் திருடிச் சென்றனா்.
இச்சம்பவத்தில் கருப்புசாமி மகன் அன்பழகன் மட்டும் தனது வீட்டில் பத்தரை பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் திருடப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். திருட்டு நடந்த வீதியில் சிசிடிவி கேமரா பொருத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.