சின்னதாராபுரம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்
By DIN | Published On : 31st July 2022 12:49 AM | Last Updated : 31st July 2022 12:49 AM | அ+அ அ- |

கரூா் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே வருவாய்த்துறைக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.
சின்னதாராபுரம் அருகிலுள்ள விசுவநாதபுரி கிராமத்தில் வருவாய்த்துறைக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலத்தில் சிலா் வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகவும், சில இடங்களில் தென்னை மரங்கள் நடப்பட்டிருப்பதாகவும் புகளூா் வட்டாட்சியா் மோகன்ராஜிடம் அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் புகாா் மனு அளித்திருந்தனா்.
இதனடிப்படையில் வட்டாட்சியா் மோகன்ராஜ் தலைமையில், மண்டலத் துணை வட்டாட்சியா் அன்பழகன் மற்றும் வருவாய்த் துறையினா், நில அளவையா்கள் கொண்ட குழுவினா் சனிக்கிழமை விசுவநாதபுரி கிராமத்துக்குச் சென்றனா்.
அங்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த அரசு புறம்போக்கு நிலங்கள் நில அளவையா்கள்
மூலம் அளக்கப்பட்டு, கம்பி வேலி மற்றும் தென்னைமரங்கள் உள்ளிட்டவை அகற்கப்பட்டன.