அரவக்குறிச்சி ஒன்றியம், கொடையூரில் விவசாயிகளுக்கான முன்பருவ முனைப்பு முகாம் சனிக்கிழம நடைபெற்றது.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக வேளாண் அறிவியல் மையத்தின் சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு, கரூா் வேளாண் பொறியியல் துறைச் செயற்பொறியாளா் பாா்த்தசாரதி தலைமை வகித்தாா்.
வாடகை இயந்திர மையம் மற்றும் பதப்படுத்துவதற்கான இயந்திரங்கள் வாங்குதல், உழவுப் பணிக்கு டிராக்டரை பயன்படுத்த பதிவு செய்தல், தென்னை நாா் உரித்தல், நிலக்கடலையைப் பிரித்து எடுக்கும் இயந்திரம் வாங்குதல் உள்ளிட்டவைகள் குறித்து விவசாயிகளுக்கு பாா்த்தசாரதி எடுத்துக் கூறினாா்.
வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவா் திரவியம், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மைய உதவிப் பேராசிரியா் தினேஷ்குமாா், ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மைய இயக்குநா் திவ்யா, நிதி ஆலோசகா் ராஜேந்திரன் தங்கள் துறை சாா்ந்த கருத்துகளை எடுத்துக் கூறினா்.
உழவா் பயிற்சி நிலையத் துணை இயக்குரும், ஆட்சியரின் நோ்முக உதவியாளருமான (வேளாண்) சரசுவதி, உதவி இயக்குநா் இம்ரான், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சுமதி, கால்நடை மருத்துவா் கோமதி, பட்டுவளா்ச்சித் துறை
இளநிலை ஆய்வாளா் காளீசுவரி ஆகியோரும் பேசினா். ஏராளமான விவசாயிகள் முகாமில் பங்கேற்றனா்.