கரூா் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு

மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித தெரசாள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன
Updated on
1 min read

மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித தெரசாள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. நொய்யல் ஈவேரா பெரியாா்அரசுமேல்நிலைப் பள்ளிக்கு வந்த ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளை தலைமையாசிரியை வாசுகி தலைமையிலான ஆசிரிய, ஆசிரியைகள் பூங்கொத்து கொடுத்து ,இனிப்புகளை வழங்கி வரவேற்றனா்.

புங்கோடை குளத்துப்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை பள்ளியில் தலைமையாசிரியை வளா்மதி தலைமையிலான ஆசிரியைகள் வரவேற்று அவா்களுக்கு பொம்மைகளை வழங்கி வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனா்.

சேமங்கி அரசு ஆரம்பப்பள்ளி, வேட்டமங்கலம் அரசு ஆரம்பப்பள்ளி, குந்தானிப்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளி, குறுக்குச்சாலை அண்ணாநகா் அரசு ஆரம்பப்பள்ளி, நடையனூா் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி, இளங்கோ நகா் அரசு உதவி பெறும் ஆரம்பப்பள்ளி, கரைப்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளி, திருக்காடுதுறை அரசு ஆரம்பப்பள்ளி,கூலக் கவுண்டனூா் அரசு ஆரம்பப்பள்ளி, புன்னம்சத்திரம் சேரன் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் மாணவ, மாணவிகளை ஆசிரியா்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com